குவாட்டர் பாட்டில், சிகரெட்டுடன் வாக்காளர்களுக்கு பரிசு பெட்டகம்: ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மீது வலைதளங்களில் குற்றச்சாட்டு

திருமலை: ஆந்திராவில் தோல்வி பயத்தால் வாக்காளர்களை கவர குவாட்டர் பாட்டில்கள், சிகரெட் அடங்கிய பரிசு பாக்ஸ்களை வினியோகம் செய்வதாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வழங்குவதாக இருகட்சிகளும் வலைத்தளத்தில் குற்றம்சாட்டி உள்ளனர். ஆந்திராவில் 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வாக்காளர்களை கவர பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி பயத்தின் காரணமாக அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு குவாட்டர் பாட்டில், சிகரெட், ஸ்வீட் பாக்சுடன் பணம் கொடுத்து கூட்டத்தை சேர்த்து வருவதாகவும், ஆனால் ஜெகன்மோகன் தனித்து நின்று செய்த நலத்திட்டங்களை கூறி மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார். கட்சியையும், ஆட்சியையும் தனியாளாக நடத்தும் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகனை இவ்வாறு தான் எதிர்கொள்வீர்களா?

உங்கள் வேலை முடிந்தது, உங்கள் நாற்காலிகளை மடித்துக்கொண்டு வீட்டிற்குச் செல்லுங்கள், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி… தோல்வி தவிர்க்க முடியாதது என பதிவு செய்துள்ளனர். இதேபோன்று எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் மார்கபுரம் பொறுப்பாளர் அண்ணா ராம்பாபு தனது பெயரில் ஸ்வீட் பாக்ஸ் மற்றும் அடியில் பணத்துடன் கூடிய கவருடன் தன்னார்வலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்கிறார்.

இதுபோன்ற செயல்களைச் செய்தாலும் மக்களை ஏமாற்ற முடியாது. இந்த முறை உங்களை தோற்கடித்து ஆந்திராவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட மக்கள் முடிவு செய்துள்ளனர் என பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு இதேபோன்று இந்த இரண்டு கட்சியின் சின்னத்துடன் கூடிய ஆணுறை பாக்கெட்கள் விநியோகம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது