இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்ததால் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் முன்னாள் பிரதமர் கலிஜா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சியினர் நேற்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த வன்முறைகளுக்காக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே இடைக்கால அரசானது, ஜூலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை மாணவர்கள் போராட்டத்தின்போது நடந்த இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் குற்றச்சாட்டின் பேரில் விசாரணையை தொடங்கியுள்ளது.