இந்த பரிந்துரைகளை சட்ட ஆணையம் ஆய்வு செய்யும். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை தொடரும். இனிமேல் காலக்ெகடு நீடிக்க மாட்டாது. சட்ட விவகாரத் துறை, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் அளித்த தகவல்கள், பரிந்துரைகளின் அடிப்படையில் 277 அறிக்கைகளை சட்ட ஆணையம் சமர்ப்பித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன், பொதுசிவில் சட்டம் தொடர்பான ஆக்கபூர்வமான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும். ெபாது சிவில் சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன’ என்றார்.