சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் இருந்து 7.22 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். 3,58,201 மாணவர்கள் 4,13,998 மாணவிகள் மூன்றாம் பாலித்தவர் ஒருவர் என 7,72,200 பேர் தேர்வெழுதுகின்றனர். பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் 43,200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.