Thursday, September 19, 2024
Home » கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக ஜிடிபி வளர்ச்சி சரிவு: தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை வெளியீடு!

கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக ஜிடிபி வளர்ச்சி சரிவு: தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை வெளியீடு!

by Nithya

டெல்லி: நடப்பாண்டில் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவு சரிந்துள்ளது. முதல் காலாண்டில் டிஜிபி 7.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில், 6.7 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் – ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விவரத்தை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் – ஜூன் மாத காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 7.1% என கணிக்கப்பட்டிருந்த நிலையில் 6.7% ஆக குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 43.64 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்த ஜிடிபி வளர்ச்சி ரூ.40.91 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. இது கடந்த 5 காலாண்டுகளில் அதாவது 15 மதங்களில் மிகக்குறைவான ஜிடிபி வளர்ச்சியாகும். 2023-24ன் கடைசி காலாண்டில் 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்த நிலையில் அதைவிடவும் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8.2ஆக இருந்தது. வேளாண் துறை வளர்ச்சியின் ஏற்ப்பட்ட பாதிப்பு ஜிடிபி வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் – ஜூன் இடையேயான காலாண்டில் 3.7% ஆக இருந்த வேளாண்துறை வளர்ச்சி நடப்பாண்டின் முதல் காலாண்டில் 2% ஆக குறைந்துள்ளது.

இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் உற்பத்தி துறையில் நடப்பு கலந்து வளர்ச்சி 6.2%-லிருந்து 7% ஆக உயர்ந்துள்ளது. தொழில், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளி தொடர்பான சேவைகள் 2023-24 நிதியாண்டில் கடைசி காலாண்டில் 9.7% ஆக இருந்ததில் இருந்து தற்போது 5.7% ஆக குறைந்துள்ளது. நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் சேவைகள் 12.6%-லிருந்து 7.1% ஆக சரிந்துள்ளது. 15 மாதங்களில் இல்லாத அளவாக நாட்டின் ஜிடிபி வளர்ச்சி சரிவை சந்தித்துள்ள நிலையில், இது இந்திய பங்குச்சந்தையை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

thirteen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi