தகவலறிந்து வந்த போலீசார், அஸ்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சிறுவனின் கழுத்தில் கத்திக்குத்து விழுந்த காயம்போல் இருப்பதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய எட்வர்ட் கென்னடி மகன் தாமஸ் என்ற ரகசியம் (19) என்பவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர், சிறுவனை குத்திக் கொன்றது தெரியவந்தது.
அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: மது உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையான நான், சம்பவத்தன்று அஸ்வின்குமார் வீட்டில் தனியாக இருப்பதை பார்த்து சென்றேன். அவனை தகாத உறவுக்கு அழைத்து வற்புறுத்தினேன். ஆனால் அஸ்வின் மறுத்து கூச்சலிட்டான். இதனால் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த காய் நறுக்கும் கத்தியை எடுத்து அஸ்வின் கழுத்தில் குத்திவிட்டு தப்பிச் சென்றேன். இவ்வாறு கூறியுள்ளான். இதையடுத்து, தாமசை போலீசார் கைது செய்தனர்.