இதனால் ஏற்பட்ட வெடி விபத்தால் பெட்ேரால் பங்கில் இருந்தவர்கள், ெபாதுமக்கள் உட்பட 25 பேர் உடல் கருகி பலியானதாகவும், சுமார் 66 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக ரஷ்யாவின் துணை சுகாதார அமைச்சர் விளாடிமிர் பிசென்கோ தெரிவித்துள்ளார். சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவில் தீ பரவியிருந்ததால் தீயை அணைக்க தாமதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர் என்று பேரிடர் நிவாரண மையம் தெரிவித்துள்ளது.