கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் KYC சரிபார்ப்புக்கு இறுதிக்கெடு விதிக்கவில்லை : ஒன்றிய அமைச்சர்

டெல்லி : கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் KYC சரிபார்ப்புக்கு இறுதிக்கெடு விதிக்கவில்லை என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எக்ஸ் தனத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,””வாடிக்கையாளரை தெரிந்துகொள்வீர்” எனப்படும் KYC சரிபார்ப்புக்கு இறுதிக்கெடு விதிக்கவில்லை என்றும் போலி கணக்குகளை அகற்றவும், மோசடியான முன்பதிவை தடுக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் KYC யை உறுதி செய்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்