டெல்லி : கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் KYC சரிபார்ப்புக்கு இறுதிக்கெடு விதிக்கவில்லை என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எக்ஸ் தனத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,””வாடிக்கையாளரை தெரிந்துகொள்வீர்” எனப்படும் KYC சரிபார்ப்புக்கு இறுதிக்கெடு விதிக்கவில்லை என்றும் போலி கணக்குகளை அகற்றவும், மோசடியான முன்பதிவை தடுக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் KYC யை உறுதி செய்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.