காற்றில் சாய்ந்த பூண்டு செடிகள்: நிமிர்த்தும் பணியில் விவசாயிகள்


ஊட்டி: காற்றில் சாய்ந்த பூண்டு செடிகளை நிமிர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதில், ஏமரால்டு, நஞ்நாடு, கப்பத்தொரை, இத்தலார், முத்தோரை உள்ளிட்ட பகுதிகள், மாவட்டத்தின் வேறு சில பகுதிகளிலும் பயிரிடப்பட்டிருந்த பூண்டு செடிகள் காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்காமல் தரையில் சாய்ந்து விழுந்தன.

இதனால், தரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பூண்டு செடிகள் பாதிக்காமல் இருக்க அவைகளை சரி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தரையில் விழுந்த பூண்டு செடிகளை ஒன்றிணைத்து அதனை கயிறு மூலம் கட்டி நிமிர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்