Thursday, July 4, 2024
Home » பூண்டு தோசை

பூண்டு தோசை

by Kalaivani Saravanan

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்,
முழு பூண்டு – 2
இஞ்சி – சிறிய துண்டு,
வரமிளகாய் – 10,
பெரிய வெங்காயம் – 1
தேவையான அளவு உப்பு,
கொத்தமல்லி தழை

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, உரித்து வைத்திருக்கும் பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டு நன்றாக வதங்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு பூண்டை இரண்டு துண்டுகளாக வெட்டி பொடிப்பொடியாக சேர்த்துக் கொண்டால், சீக்கிரமே வதங்கி விடும். பூண்டை பச்சை வாடை போகும் அளவு, வதக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நல்லெண்ணெயும் முடிந்தவரை கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சட்னி கெட்டுப்போகாமல் இருக்க எண்ணெய் தான் பாதுகாப்பு. கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டு நன்றாக வதக்கிய பின்பு, பச்சை வாடை போன பின்புதான், சிறிய துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கிப் போட்டுக் கொள்ளவும். அதன் பின்பு வரமிளகாய் சேர்க்கவேண்டும். (வரமிளகாய் காரத்திற்கு ஏற்ப பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள்).

அதன் பின் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம். வெங்காயம் இரண்டு நிமிடம் வதங்கிய பின்பு, நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிடசிடப்பு அடங்கும் வரை வதக்கவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கி விடுங்கள். கடாயில் இருக்கும் விழுதை நன்றாக ஆற வைத்த பின்பு, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும் அப்போதுதான், பூண்டுப் பல்லின் சுவை அருமையாக இருக்கும். இதை தண்ணீர் படாமல், காற்றுப் புகாமல், ஒரு சில்வர் டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தோசைக்கல்லில் எப்பவும் போல் மெல்லிசான தோசையை சுட்டு, மேல் மாவு வெந்த பின், அதாவது தோசைக்கல்லில் தோசை ஊற்றி உடனேயே, தோசை மாவாக இருக்கும்போதே, மேலே இந்த பூண்டு சட்னியைதடவி விட்டீர்கள் என்றால், தோசை கொசகொசவென்று மாறிவிடும். ஆகவே, தோசையின் மேல் பகுதி வெந்ததும், நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும், பூண்டு சட்னி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, தோசையின் மேல் போட்டு பரவலாகத் தடவி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, ஒரு நிமிடம் கழித்து தோசை மொறுமொறுவென்று சிவந்ததும், சுருட்டி எடுத்தீர்கள் என்றால், பூண்டு மசாலா தோசை தயார்.

You may also like

Leave a Comment

three × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi