தோட்ட வேலைக்கு வந்த பெண்ணுக்கு பாஜ நிர்வாகி பாலியல் தொல்லை

நெல்லை: நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே தெற்கு கும்பிளம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). பா.ஜ. நெல்லை தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர். இவரது தோட்டத்தில் வெண்டைக்காய் பறிக்கும் வேலையில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.  இந்த பணியில் நேற்று முன்தினம் 35 வயது பெண்ணும் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு பகுதியில் தனியாக வெண்டைக்காய் பறித்து கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு திடீரென செல்வகுமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு தப்பி ஓடி ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து செல்வகுமாரை கைது செய்ய அவரது தோட்டத்துக்கு சென்றனர். அதற்குள் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடுகின்றனர்.

Related posts

கடலூர் முதுநகரில் சமூகவிரோதிகளின் கூடாரமான ஆங்கிலேயர் காலத்து கட்டிடம்

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு..!!

மதுரை மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!!