இதையடுத்து பள்ளி மாணவர்களும், கஞ்சா போதையில் இருந்த நபரும் ஒரு கட்டத்தில் மாறிமாறி தாக்கி கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் கைகளில் கற்களை எடுத்துக்கொண்டு பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து மிகுந்த சாலையில் அங்குமிங்குமாக ஓடினார். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. இதனைப் பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பீதியடைந்தனர். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே அரசுப்பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்தை மடக்கி அதன் மேற்கூறையின் மீது அமர்ந்து வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.