இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதாலும் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மதிவாணன், கலெக்டர் சுப்புலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் காஜா, குலாப், குடியரசன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு ஆணைகளை இன்ஸ்பெக்டர்கள் நேற்று சேலம் மத்திய சிறைச்சாலையில் சமர்ப்பித்தனர். மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுப்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி மதிவாணன் எச்சரித்துள்ளார்.