சென்னை: காந்தி நினைவு நாளில் மதவெறிக்கு எதிராக இணைந்து குரல் கொடுப்போம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதவெறிக்கு எதிராக மக்களை அணி திரட்டி மதச் சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் எதேச்சதிகார பிடியில் இருந்து மக்களாட்சி மாண்புகளை காத்திட காந்தி நினைவுநாளில் உறுதியேற்போம் என்று அவர் கூறியுள்ளார்.