இவ்விவகாரத்தில் அங்கு நகராட்சி ஆணையராக பணியாற்றிய அருள்பிரகாசம், முதல்வர் ரங்கசாமியின் உத்தரவை மீறியும், விதிகளை கடைபிடிக்காமலும் முறைகேடாக சூதாட்ட கிளப் நடத்த அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது அதன்பிறகு சூதாட்ட கிளப்புக்கான அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தருமாறு உள்ளாட்சித்துறை இயக்குனர் தரப்பில், ஏனாம் மண்டல அதிகாரியிடம் கோரப்பட்டது. அதன்படி மண்டல நிர்வாகியான முனுசாமி, ஏனாம் பகுதியில் விதிகளை மீறி சூதாட்ட கிளப்புக்கு அனுமதி கொடுத்தது சம்பந்தமாக விசாரணை நடத்தி அனைத்து தகவல்களையும் துறை இயக்குனருக்கு அனுப்பினார். அவரிடமிருந்து துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்காக உயர் அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் ஏனாம் நகராட்சி ஆணையர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் ஏனாம் நகராட்சி ஆணையர் அருள் பிரகாசத்தை அதிரடியாக நேற்று சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.