கும்மிடிப்பூண்டியில் சூதாடிய 8 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி காவல்நிலைய எஸ்ஐ குணசேகரன் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் தேவன்பட்டு, பெரியகரும்பூர் பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பொன்னேரி தாலுகா, பெரியகரும்பூர் பகுதியை சேர்ந்த உலகநாதன் (36), நரசிம்மன் (29), ஆறுமுகம் (50), ஆதி (29), கலையரசன் (34), பாலீஸ்வரன் (49), விக்கி (33), சேகர் (57) ஆகிய 8 பேரை மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

வழக்குப்பதிவு செய்து, நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது