டெல்லி: ஜி-20 மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு அமலுக்கு வந்தது. டெல்லி விமான நிலையம் முதல் நகரின் மையப் பகுதிகள், எல்லைப் பகுதிகள் வரை உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ், துணை ராணுவ வீரர்கள், கமாண்டோ படைகள், உளவுத்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு கனரக வாகனங்களுக்கு தடை விதித்துள்ளனர்.