செப்டம்பர் 9, 10-ம் தேதி நடைபெறும் G20 மாநாட்டின் பாதுகாப்பு காரணமாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

டெல்லி: G20 மாநாட்டிற்காக இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லி போக்குவரத்து சிறப்பு காவல் ஆணையர் சுரேந்தர் யாதவ் இன்று தெரிவித்தது படி உச்சநீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் தவிர டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்தும் செயல்படும். மேலும் தலைமை பாதுகாப்பு ஆணையரிடம் இருந்து டிசிபி மெட்ரோவிற்கு அனுப்பிய கடிதத்தின் படி பாதுகாப்பு சம்மந்தமாக சில மெட்ரோ ரயில் நிலையங்களின் கதவுகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போக்குவரத்து சிறப்பு காவல் ஆணையர் சுரேந்தர் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, சுப்ரீம் கோர்ட் மெட்ரோ சேவைகள் மட்டும் நிறுத்தி வைக்கப்படும் மற்ற அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் சேவைகள் தொடர்ந்து செயல்படும் பாதுகாப்பு விதிகளின் படி சில மெட்ரோ நிலையங்களின் நுழைவாயில் மற்றும் வெளியேறு இடத்தில் கதவுகள் 15 முதல் 20 நிமிடங்கள் மூடப்படும். ஆனால், மெட்ரோ ரயில் சேவைகள் தொடர்ந்து நடைபெறும். பாதுகாப்பு துறை அதிகாரிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட், ஜன்பத், பிகாஜி காமா பிளேஸ், கான் மார்க்கெட் மற்றும் தௌலா குவான் மெட்ரோ நிலையங்கள் பதட்டமான நிலையம் என கண்டறியப்பட்டு இந்த மெட்ரோ நிலையங்களின் கதவுகள் அடைக்கப்படுவதற்கு கடிதம் அனுப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லி போக்குவரத்து சிறப்பு காவல் ஆணையர் சுரேந்தர் யாதவ் டெல்லியில் பேருந்து இயக்கங்கள் பற்றி தெரிவிக்கும் போது, ISBT பேருந்துகள் செப்டம்பர் 8ஆம் தேதி காலை 5 மணி முதல் செயல்படும். ஆனால், குருகிராம் வழியான சாலையில் நுழைய அனுமதிக்கப்படாது அந்த வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் இஃப்கோ சௌக்கில் இருந்து எம்ஜி சாலையை நோக்கி திருப்பிவிடப்பட்டு அங்கிருந்து மெஹ்ராலி செல்லும். மேலும் கூட்டம் நடக்கக்கூடிய கட்டுப்பாட்டு பகுதியில் பேருந்து வசதிகள் இருக்காது. டெல்லி போக்குவரத்து பேருந்துகளும் (DTC) ஒருங்கிணைத்து தடை செய்யப்பட்ட பகுதியை தவிர கடைசி வழி தடம் வரை மக்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

G20 மாநாடு தொடங்க உள்ளதால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் எச்சரிக்கையான இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தவறான கருத்துக்கள், மிரட்டல்கள் பரப்பபடுகிறதா? மேலும் தவறான மற்றும் போலியான மின்னஞ்சல் ஏதும் பரப்பபடுகிறதா? என்பது குறித்து உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு தனி பிரிவு ஆய்வு செய்து வருகிறது.G20 மாநாட்டில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாடு தேசிய தலைநகரான டெல்லியில் செப்டம்பர் 9ஆம் தேதி மற்றும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக தலைநகர் டெல்லி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேவையில்லாத சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக கூடுதல் விழிப்புணர்வுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் G20 மாநாட்டிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பல மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. மேலும் இந்த பிக் டிக்கெட் மாநாட்டிற்காக தீவிரமாக பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து வெவ்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி