புதுடெல்லி: டெல்லியில் ஜி20 நாடுகளின் சபாநாயகர் மாநாடு இன்று தொடங்குகின்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக கனடா சபாநாயகர் ரேமண்டே காக்னே உறுதி செய்திருந்தார். இந்நிலையில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் மாநாட்டில் கனடா சபாநாயகர் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.