சேலம்: சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை அடுத்த சூரப்பள்ளி கிராமம், சோரையான் வளவு பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (90). இவர் கடந்த 5ம் தேதி, காலமானார். இதையடுத்து இறுதி ஊர்வலத்தில் வானவெடி பட்டாசு வெடித்த போது, எதிர்பாராத விதமாக மொத்தமாக வாங்கி வைத்திருந்த பட்டாசு மூட்டையின் மேல் தீப்பொறி பட்டது. இதில், உடல் கருகி சிகிச்சை பெற்று வந்த செல்லம்மாள் (75) செல்வராஜ் (44) ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.