அப்போது வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த ஒரு கார் இந்த குரங்கின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த குரங்கு சம்பவ இடத்திலேய உயிரிழந்தது. இதை தொடர்ந்து அப்பகுதியினர் அந்த இடத்தில் இறந்து கிடந்த குரங்கின் சடலத்திற்கு மலர் மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர். கிராம மக்களின் இந்த மனிதநேய செயலுக்கு பல தரப்பினரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.