குளிர்சாதனப் பெட்டியில் துர்நாற்றம்…தவிர்ப்பது எப்படி?

வீட்டில் எது மீதமானாலும் கொண்டு சேர்க்குமிடம் குளிர்சாதனப் பெட்டிதான். போதாக் குறைக்கு, சாக்லெட், பழங்கள் என அப்படியே அரைகுறையாக சாப்பிட்டு வைக்கும் வீட்டு குட்டீஸ்கள் என குளிர்சாதனப் பெட்டி பராமரிப்புக்கு மட்டும் வாரம் முழுக்கக் கொடுத்தாலும் போதாது. இதனால் ஃபிரிட்ஜ் கதவை திறந்ததுமே துர்நாற்றம் அடிக்கும். மேலும் இந்த பலவீனமான பராமரிப்பால் குளிர்சாதனப்பெட்டியின் ஆயுள் காலமும் குறையும். இதைத் தவிர்க்கும் எளிய வழிகள் சிலவற்றைக் காண்போம்.ஃபிரிட்ஜில் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் இரண்டு துண்டாக வெட்டிய எலுமிச்சைப் பழத்தை போடுங்கள். பின்னர் அந்த பாத்திரத்தை ஃபிரிட்ஜில் வைத்திடுங்கள். இப்படி செய்தால் ஃபிரிட்ஜில் துர்நாற்றம் முற்றிலும் நீங்கி விடும்.

ஃபிரிட்ஜில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்க பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து அதை கொண்டு ஃபிரிட்ஜை சுத்தம் செய்யவும். இது ஃபிரிட்ஜின் துர்நாற்றத்தை எளிதில் நீக்கி விடும். பூஞ்சைகள் தொற்றையும் தவிர்க்கும். காபிக் கொட்டை ஃபிரிட்ஜின் துர்நாற்றத்தை எளிதில் நீக்கும். காபி கொட்டைகளை ஃபிரிட்ஜில் வெவ்வேறு மூலைகளில் வைத்து இரவு முழுவதும் மூடி வைத்து, காலையில் ஃபிரிட்ஜை திறந்தால் துர்நாற்றம் இருக்காது. மேலும் நல்ல நறுமணமும் வீசும். ஃபிரிட்ஜில் உப்பு போட்டு சுத்தம் செய்யலாம். வெந்நீரில் உப்பு கலந்து அந்த தண்ணீரில் துணியை நனைத்து ஃபிரிட்ஜை துடைத்து சுத்தம் செய்யலாம்.ஆரஞ்சுத் தோல்களை ஃபிரிட்ஜில் வைத்தாலே போதும். துர்நாற்றம் தானாகவே மறைந்து விடும். ஆனால் அவற்றையும் குறிப்பிட்ட கால நேரத்தில் எடுத்துவிட வேண்டும். இல்லையேல் அவை அழுகி மேலும் ஃபிரிட்ஜை கெடுக்கும்.
– அ. ப. ஜெயபால்

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்