மேலும், கோவாவில் இருந்து கர்நாடகாவுக்கு நேற்று ஒரு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இரு மாநிலங்களின் எல்லை பகுதியான தூத்சாகர்-சோனாலியம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்த போது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 3 ரயில்கள் வேறு மார்க்கமாக திருப்பி விடப்பட்டது. 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தென் மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார். நேற்று மட்டும் மேற்கு வங்கம்,உபி, கோவா ஆகிய மாநிலங்களில் 3சரக்கு ரயில்கள் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.