கட்டணமில்லா மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்க அழைப்பு: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இம்மையத்தில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இங்கு பயிற்சி பெற்றவர்கள் தவரி, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டை சார்ந்த பிற தேர்வர்களும் இதில் பங்கேற்கலாம். கட்டணம் ஏதும் இல்லை. பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், தங்களது விருப்பத்தினை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9345766957 அல்லது 044-24621475 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம்.

Related posts

கட்சி சின்னம் கைவிட்டு போனது என்று சும்மா… குழந்தை போல் அழாதீர்கள்: உத்தவை விமர்சித்த ஏக்நாத் ஷிண்டே!

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார் கூடுதல் தலைமைச் செயலாளர்