மேலும் கடந்த 1947ம் ஆண்டில் பிச்சை எடுத்துதான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்றும், அதன் பிறகு வந்த காங்கிரஸ் அரசும் ஆங்கிலேயர்களின் நீட்சிதான் என்றும் பேசியுள்ளார். இவரது பேச்சுகள், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. அவர் மீது தேசதுரோக வழக்குபதிய வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக அதர்தல் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நீதிமன்றத்தை நாடியுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஸ்வேஸ்வரி மிஸ்ரா, கங்கனாவுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி
வைத்தார்.