Sunday, September 8, 2024
Home » சுதந்திர போராட்ட வீரர்களை ஒன்றிய அரசு நடத்தும் விதம் வேதனை அளிக்கிறது: டெல்லி உயர்நீதிமன்றம் கவலை

சுதந்திர போராட்ட வீரர்களை ஒன்றிய அரசு நடத்தும் விதம் வேதனை அளிக்கிறது: டெல்லி உயர்நீதிமன்றம் கவலை

by Lavanya

டெல்லி: சுதந்திர போராட்ட வீரர்களை ஒன்றிய அரசு நடத்தும் விதம் வேதனை அளிக்கிறது என டெல்லி உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. பீகாரைச் சேர்ந்த 96 வயதான சுதந்திர போராட்ட வீரர் உத்தம் லால்சிங் ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ளார். 1983ல் ஓய்வூதியம் வழங்க பீகார் அரசு, ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்த நிலையில் 2009 வரை நடவடிக்கை இல்லை என மனுதாக்கல் செய்யப்பட்டது. 2017ல் பீகார் அரசு அனுப்பிய பரிந்துரை தங்களிடம் இல்லை என்று ஒன்றிய அரசு கூறியது. பல அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டும் பலன் கிடைக்காததால் டெல்லி ஐகோர்ட்டில் உத்தம் லால்சிங் வழக்கு தொடர்ந்தார். 1980 முதல் வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை 6% வட்டியுடன் 12 வாரத்தில் வழங்க ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஒன்றிய அரசுக்கு ரூ.20,000 அபராதம் விதிப்பு

சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதியம் வழங்காமல் இருந்த ஒன்றிய அரசுக்கு ரூ.20,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர்கள் மீது ஒன்றிய அரசு காட்டும் அக்கறை வேதனை அளிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

sixteen − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi