அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் ஆலோசனையின்படி, வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் கண் சிகிச்சை முகாமை ஏற்பாடு செய்திருந்தார். இந்த முகாம், காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் உள்ள வாசன் ஐகேர் மருத்துவமனையுடன் இணைந்து நடந்தது. இதில், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்புரை மற்றும் கண்ணில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதற்கு தகுந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.