மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள்: எம்எல்ஏ வழங்கினார்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி கிராமத்தில் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் பூண்டி ஒன்றியத்தில் உள்ள மெய்யூர், போந்தவாக்கம், சீத்தஞ்சேரி, பென்னலூர்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 4 பள்ளிகளின் மாணவ – மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சீத்தஞ்சேரி பள்ளியின் தலைமையாசிரியர் ரேணுகாதேவி தலைமை தாங்கினார். முன்னதாக பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் பொன்னுசாமி வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் சரசு பூபாலன், சித்ரா பாபு, வக்கில் பாஸ்கர், லாவண்யா, தலைமையாசிரியர்கள் கோவிந்தராஜன், ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு 227 மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் கஜேந்திரன், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் சிவய்யா, சீனிவாசலு, வேல்முருகன், பாலாஜி, ரகு, குருமூர்த்தி, அரசு வழக்கறிஞர் வெஸ்லி, சுப்பிரமணி, தில்லைகுமார், விஜயமாலா பாஸ்கர், கோல்டுமணி, விஜயன், வேணு, வாசு, ரங்கையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னையில் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சென்னையில் நேற்று அதிகபட்சமாக மணலியில் 14.49 சென்டி மீட்டர் மழை பதிவு!

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்