திருவொற்றியூர்: திருவொற்றியூர் அரசு உதவி பெறும் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பஞ்சநாதன் தலைமை வகித்தார். கே.பி.சங்கர் எம்எல்ஏ கலந்துகொண்டு 287 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இதுபோல் அரசு உதவி பெறும் ஸ்ரீமகாவீர் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 47 பேருக்கும் அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.