இந்நிலையில், இவர்கள் குடியிருக்கும் இடத்தின் பட்டாவானது தனிநபரின் பெயரில் இருப்பதாகவும், அதனால், இலவச வீட்டுமனை பட்டா வழங்க முடியாது என்றும் வருவாய்த்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.
இந்தநிலையில், கலெக்டர் த.பிரபு சங்கர் உத்தரவின் பேரில் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய வட்டங்களில் தனி நபர் மீது பட்டா இருந்தும், பல ஆண்டுகளாக நிலத்தை உரிமை கோராமல் இருக்கும் நிலத்தில் வீடு கட்டிக்கொண்டு வசிப்பவர்கள் குறித்து தாசில்தார்களிடம் விவரங்கள் கோரப்பட்டுள்ளது.