பெங்களூரு: மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஆஜரான லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆட் பீரோ நிறுவனத்திடம் ரூ. 6.2 கோடி கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக வழக்கு பதிவாகியிருந்தது. வழக்கில் லதா ரஜினிகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.