அப்போது அவர், தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்கு பணம் கடனாக கேட்டுள்ளார். இதையடுத்து அவர், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.18 லட்சம் வாங்கியுள்ளார். அதற்கு பதில் காசோலைகளை கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை திரும்ப தரவில்லை. இதுபற்றி பலமுறை கேட்டபோதும், அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் இளம்பெண், கிரிஷா பணத்தை மோசடி செய்ய இருப்பதை தெரிந்து கொண்டார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரிஷாவை கைது செய்தனர்.