பெண் காவலரிடம் ரூ4 லட்சம் மோசடி

அண்ணாநகர்: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராதிகா (23). இவர், அமைந்தகரை போக்குவரத்து காவல் நிலையத்தில், காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ், வேன் வாங்குவதற்கு கடந்த 2022ம் ஆண்டு பெண் காவலர் ராதிகாவிடம் ₹4 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

இதனை திருப்பி கொடுக்காமல் நீண்ட வருடமாக ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ராதிகா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்