இடம் வாங்கி தருவதாக பாஜ நிர்வாகி ரூ.35 லட்சம் மோசடி

சிவகாசி: இடம் வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக பாஜ நிர்வாகியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் சத்யராஜ்(40). பாஜ அரசு தொடர்பு துறை மாவட்ட செயலாளர். நில புரோக்கர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(40) என்பவரிடம், ஆமத்தூர் அருகே தனக்கு தெரிந்தவருக்கு சொந்தமான இடத்தை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் பெற்றார். ஆனால் பேசியபடி இடத்தை வாங்கி தரவில்லை. எனவே ஈஸ்வரன் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் சத்யராஜ் பணத்தை திருப்பி தரவில்லை. இதையடுத்து ஈஸ்வரன் திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சத்யராஜிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்