அவருக்கு துணையாக இருந்ததுடன் மிரட்டல் விடுத்த கார் டிரைவர் அசோக்குமார், ராஜசேகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். காயத்ரி, அசோக்குமார், ராஜசேகர் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தற்போது மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி சேலம் பெண்கள் சிறையில் உள்ள காயத்ரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதேபோல் அசோக்குமார், ராஜசேகர் ஆகியோரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.