ஆனால் பிரமோத்குமார் மீது வழக்குகள் இருந்ததால் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதேநேரம் கடந்த 2012ம் ஆண்டு சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இதையடுத்து இவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த புதுடில்லி நிர்வாகத் தீர்ப்பாயம் கடந்த பிப்ரவரி 20ம் தேதி ஐபிஎஸ் அதிகாரியான பிரமோத்குமார் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களில் இருந்த அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் பிரமோத் குமார் விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கூடுதல் டிஜிபியாக உள்ள பிரமோத் குமாரை தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டார்.