ரூ.51 லட்சம் மோசடி பாஜ நிர்வாகி போலீஸ் நிலையம் முன் தீக்குளிப்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் சத்யராஜ்(42). பாஜ விருதுநகர் மேற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளர். இவர் திருத்தங்கல் ஜவுளிக்கடை அதிபர் ஈஸ்வரனிடம் 5 ஏக்கர் நிலத்தை கிரயம் முடித்து தருவதாக ரூ.51 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சத்யராஜ் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பெட்ரோல் கேனுடன் திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனிற்கு வந்த சத்யராஜ், திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனடியாக தீயை அணைத்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி

ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விசாரணை

“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!