ரூ.2 கோடி மோசடி தொடர்பாக நடிகர் விமல் கொடுத்த புகார் முடித்துவைப்பு: ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்

சென்னை: தன்னை ஏமாற்றி, 2 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக சினிமா பைனான்சியர் கோபி, வினியோகஸ்தர் சிங்காரவேலன், அவரது மேலாளர் விக்னேஷ் ஆகியோருக்கு எதிராக நடிகர் விமல் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, விக்னேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட், 2 மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தை அணுகும்படி இரு தரப்புக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்து, நடவடிக்கை கைவிடப்பட்டதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிவழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு