இந்த நிலையில், இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தை அணுகும்படி இரு தரப்புக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்து, நடவடிக்கை கைவிடப்பட்டதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிவழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.