அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குவாட்ரி கூறும்போது, “ஒருகாலத்தில் சுதந்திர நாடாக இருந்த பலுசிஸ்தான் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கிறது. பலுசிஸ்தான் மக்கள் அனைத்து வகையாக கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். பலுசிஸ்தான் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதையெல்லாம் சீனாவுடன் சேர்ந்து பாகிஸ்தான் செய்து வருகிறது. இந்தியாவும், பலுசிஸ்தானும் மதத்தின் பெயரால் பிரிக்கப்படுகின்றன. இருநாடுகளுக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. ஐக்கியநாடுகள் அவையில் பலுசிஸ்தானுக்கு ஆதரவாக பேச இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது. பலுசிஸ்தான் விடுதலைக்கு ஆதரவாக பிரதமர் மோடி குரல் கொடுக்க வேண்டும். எங்களுக்கு இந்தியா துணை நின்றால் நாங்களும் அவர்களுக்கு துணையாக இருப்போம்” என்றார்.