இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து புகழேந்தி, ஆடலரசு, ராஜசேகர் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். கள்ளத்துப்பாக்கி எப்படி ராஜசேகருக்கு கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கள்ளத்துப்பாக்கி வாங்கியதில் திருவிடைமருதூர் சுயேட்சை கவுன்சிலருக்கு தொடர்பு இருப்பதை தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் திருவிடைமருதுார் பேரூராட்சி சுயேட்சை கவுன்சிலரான திருவிடைமருதூர் வடக்கு எடத்தெருவை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் (30) என்பவரை நேற்று முன்தினம் விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர்.