ஆந்திரா: ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. உள்வட்டச்சாலை முறைகேடு தொடர்பான வழக்கில் நர லோகேஷுக்கு ஆந்திர சிஐடி போலீஸ் நேரில் சம்மன் அளித்தது. நோட்டீஸை பெற்றுக்கொண்ட நர லோகேஷ் அக்.4-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்குதேசம் கட்சி எம்.பி.யான ஜெயதேவ் கல்லாவுக்கும் ஆந்திர சிஐடி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.