டெல்லி: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். செந்தில் பாலாஜி 15 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வருகிறார்.