இதனால், 2015ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் தேங்கியிருந்த 306 இடங்கள், 2020ம் ஆண்டில் மூன்றாக குறைக்கப்பட்டது. இந்தநிலையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் மூலமாக ஆதரமற்ற புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும் மாநகராட்சி பொறியாளர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதுபோன்ற வழக்குகளால், அரசு அதிகாரிகள் மத்தியில் ஒரு தொய்வு ஏற்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.