சென்னை: முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் உள்ளிட்டோர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சுபாஷ் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொடப்பாடி ராஜேஷ், இளங்கோவன் செந்தில், அருண் முருகன், அஜித்பாஸ்கர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.