இந்நிலையில் விதிஷாவில் உள்ள ஹனுமன் கோயிலுக்கு முன்னாள் முதல்வர் சவுகான் சென்றார். அப்போது அவரை அங்கிருந்த பெண்கள் சூழ்ந்து கொண்டனர். பையா, மாமா என்று அழைத்து அவரை அழைத்து நெகிழ்ந்தனர். அவர் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று அங்கு திரண்ட பெண்கள் வலியுறுத்தினார்கள். அப்போது சிவராஜ் சிங்கின் கண்கள் கலங்கின. அவர்களிடம் நான் மத்தியப்பிரதேசத்தை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்று சிவராஜ் சிங் சவுகான் உறுதியளித்தார்.