மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நாளை ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி செல்லூர் ராஜூ மீது வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். வழக்கு தொடர்பாக செல்லூர் ராஜூவுக்கு நோட்டீஸ்
அனுப்பப்பட்ட நிலையில் நாளை ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.