விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 3 ஆண்டு சிறையை எதிர்த்து ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை இன்று நடைபெறுவதாக இருந்தது. இருதரப்பு விவாதம் இன்று நடைபெறும் என்று கூறி இருந்த நிலையில் ராஜேஷ்தாஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.