சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கின் விசாரணை பிப்.12-ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது. அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக சி.வி.சண்முகம் மீது வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு விசாரணையை பிப்.12-ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.