சென்னை: போலி ஆவணம் மூலம் எஸ்.சி. சான்றிதழ் பெற்று சட்டம் படித்தவரை கைது செய்த காவல்துறைக்கு எஸ்.சி. ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. வேங்கை வயலில் விசாரணை நடத்த இருப்பதாக எஸ்.சி. ஆணைய மாநில இயக்குனர் ரவிவர்மன் சென்னையில் பேட்டியளித்தார். முறைகேடு கண்டறிந்து சம்பந்தப்பட்ட ரமேஷ் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போலீசில் புகார் தரப்பட்டது. ரமேஷ் மணிகண்டனை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்த அடையாறு, தரமணி போலீசுக்கு எஸ்.சி.ஆணையம் பாராட்டு தெரிவித்தது.