கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஏற்கனவே உயிரிழப்பு எண்ணிக்கை 56 ஆக இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாபுரத்தைச் சேர்ந்த மதன் என்பவர் இன்று உயிரிழந்தார்.